கோடி நட்சத்திரங்கள் ஜொலித்தாலும் அம்மாவின் ஜோடி மூக்குதிக்கு இணையாகாது .
இளம்பச்சை கிளிப்பச்சை கரும்பச்சைபார்த்தால் பசி தீரும் தாவரம் பார்.
சத்தியம் செய்கிறேன்கத்தியை விடவும் கூர்மையானது என் கவிதை.
கணக்கு பார்க்கையில்தான் தெரிகிறது இருப்பதே பெரிய விஷயம் என்பது
நகர்.நட.ஓடு.என்ன செய்தாலும் சுவடுகள் முக்கியம்.
குறைகள் இருப்பதாய் கவலை கொள்கிறாய் ஓட்டைகள் இல்லாத குழலை வாசிக்க முடியாது.
நாடகத்துக்கு சினிமா. சினிமாவுக்கு சின்னத்திரை. சின்னத்திரைக்கு யூடியூப் சேனல். இடுப்பிலிருந்தே இறங்குகின்றனதுடுக்கான குழந்தைகள். கொழு சுமப்பவன்அழுகிறான் எழு மானிடமே